வடமணப்பாக்கம் வி. வெங்கட்ராமன் அரசுப் பணி நிறைவு – அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழா

1 Min Read

செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வடமணப்பாக்கம்
வி. வெங்கட்ராமனின் அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழா – பணி நிறைவு பாராட்டு விழாவையொட்டி
வி. வெங்கட்ராமன் – மு. தமிழ்மொழி இணையருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் மோகனா அம்மையார் வெங்கட்ராமனுக்கு பயனாடை அணிவித்தார்.

மு. தமிழ்மொழிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்தார். இயக்க நூல்களை வழங்கிய தமிழர் தலைவர் இணையரின் இயக்கப் பணிகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், வெங்கட்ராமனின் மகள் வெ. எழில்மதி, மகன் வெ. இளஞ்செழியன் ஆகியோர் உள்ளனர். (சென்னை 9.9.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *