தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, ‘‘பகுத்தறிவும் மாணவர்களும்’’ எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் (சென்னை 9.9.2024)

1 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழர் தலைவருக்கு ஆள் உயர ரோஜா மாலை அணிவித்து அன்போடு வரவேற்றனர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், கரு. அண்ணாமலை உள்ளனர்.

திராவிடர் கழகம்

சிறப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்த கலைஞர் கருணாநிதி நகர் பகுதி தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். * தி.மு.க இளைஞரணி சார்பில் நடத்திய பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற மகிழனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.

திராவிடர் கழகம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51 ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, ‘‘பகுத்தறிவும் மாணவர்களும்’’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியரின் பகுத்தறிவு உரை கேட்க திரண்டிருந்தோர் (சென்னை – 9.9.2024)

திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *