குரூப் 4 தேர்வு முடிவு: அடுத்த மாதம் வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, செப்.10- 15 லட்சத்து 88 ஆயிரம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்-108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளர்க்- 3, தனிச் செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6,244 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை கடந்த ஜூன் 9ஆம் தேதி நடத்தியது.

இத்தேர்வு எழுத 20 லட்சத்து 37 ஆயிரத்து 101 பேர் அனுமதிக்கப்பட் டிருந்தனர். ஆனால், 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் (78 சதவீதம்) மட்டுமே தேர்வு எழுதினர். 4 லட் சத்து 48 ஆயிரத்து 90 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால், ஒரு பணியிடத்துக்கு 254 பேர் போட்டி யிடும் சூழ்நிலை உருவானது. திருவிழா போல நடந்த தேர்வுக்கான முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தேர்வு எழுதியவர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் குரூப் 4 தேர்வு எப்போது வெளியாகும் என்பது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் தளப் பதிவில், “ ஜூன் மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவு அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியிடப்படும்” என்று அறிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *