பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மொத்தம் 29 பதக்கங்கள்

1 Min Read

பாரிஸ், செப்.10- பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியா 29 பதக்கங் களை வென்றுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17ஆவது பாராஒலிம்பிக் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த தொடர் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி தொடங்கி 8.9.2024 அன்று நிறைவடைந்தது.
கடைசி நாள் போட்டியில் இந்தியா தரப்பில் பூஜா இறுதி வீராங்கனையாக கனோயிங் போட்டியில் பங்கேற்றார்.

ஆனால் போட்டியின் அரையிறுதியில் பூஜா தோல்வியை தழுவினார்.
போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் பூஜா தகுதி பெறவில்லை. எனவே இப்போட்டியுடன் நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இந்தி யாவின் போட்டிகள் முடிவடைந்தன.
இந்த பாராஒலிம்பிக் போட்டி யின் பதக்கப் பட்டியலில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என்று 29 பதக்கங்களுடன் 18ஆவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *