அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஆக. 25 முதல் காலைச் சிற்றுண்டி

2 Min Read

அரசியல்

சென்னை, ஆக. 6 – முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரி வுபடுத்தப்படவுள்ளது.

இந்த திட்டம் நாகப்பட்டி னம் மாவட்டம் திருக்குவ ளையில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு, தற்போதைய நிதிநிலை அறிக்கையில், மாணவர்களின் வருகை மற் றும் செயல்திறனானது இந்த திட்டத்தின் மூலம் அதிகரித்து உள்ளதால் அனைத்துப் பள்ளி களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தது. 

இந்த நிலையில், தற்போது, 1,978 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டால், மொத்தம் உள்ள 31,008 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் 15,75,900 மாணவர்கள் பயனடைவார் கள். ரூ. 404 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட் டத்தின் கீழ் பயனடையும் ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் ரூ.12.71 செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை விரிவுபடுத் துவதற்கான அனைத்து ஏற்பா டுகளும் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலத்துறையின் மூத்த அதிகாரி கூறினார். “தமிழக மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களை கண்டறிந்து அவர்களுக் கான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நாங்கள் சமையல் பாத்திரங்களை வழங்கியுள்ளோம். தற்போது சமையலறைகள் தயாராக உள்ளன. இந்த திட்டத்தை நாகப்பட்டினத்தில் தொடங் குவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம். முதல மைச்சர் அலுவலகத்தின் ஒப்பு தலுக்காக நாங்கள் காத்திருக் கிறோம்”  என்று அவர் மேலும் கூறினார்.

மதியம் உணவுத் திட்டத்தை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏற்கெனவே கண் காணித்து வந்த நிலையில், தற்போது ஊரக வளர்ச்சித் துறை  வெளியிட்டுள்ள அரசா ணையில், வட்டார  வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் (மதியம் உணவு) ஆகியோரும் இந்த திட்டப் பணிகளில் ஈடு படுவார்கள் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஒவ் வொரு மாணவருக்கும் 100 மி.லி. காய்கறிகளுடன் சாம் பார் மற்றும்  150-200 கிராம் உணவு வழங்கப்படும். வாரத் திற்கு இரண்டு முறையாவது உள்ளூரில் கிடைக்கும் சிறு தானியங்களைக் கொண்டு காலை உணவு வழங்கப்படும் எனவும், மாணவர்களுக்கு  காலை 8 மணி முதல் 8.50 மணி வரை உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *