தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா!

Viduthalai
1 Min Read

காஞ்சிபுரம் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

காஞ்சிபுரம், செப். 10- காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை, குறளகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 8.9.2024 அன்று காலை 11.00 மணிய ளவில் நடைபெற்றது.
மாவட்ட இணைச் செயலாளர் ஆ. மோகன் வரவேற்புரை நிகழ்த் தினார். மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி தலைமை தாங்கினார்.
தலைமை கழக அமைப்பாளர் பு. எல்லப்பன் மற்றும் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் முனைவர் பா.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர கழகத் தலைவர் ந.சிதம்பரநாதன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா. இளம்பரிதி, வாலாஜாபாத் ஒன்றிய கழக அமைப்பாளர் எஸ். செல்வம், மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் வி. கோவிந்தராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அ. ரேவதி, போளூர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்
தந்தை பெரியாரின் 146 பிறந்த நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதென தீர்மானிக்கப் பட்டது.
செப்டம்பர் 17 மாலை காஞ்சிபுரத்தில் சுயமரியாதைக் குடும்பங்கள் கூடி உரையாடி, உண்டு களித்து அய்யாவின் கொள்கைகளைப் பகிர்ந்து கொள்வதென்றும் சிறப்பு அழைப்பாளரை அழைப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
தலைமைக் கழக அமைப்பாளர் பு.எல்லப்பன் பொறுப்பு மாவட்டங்களை ஒருங்கிணைத்து ஆசிரியர் பிறந்த நாளான டிசம்பர் 2இல் தந்தை பெரியார் பட ஊர்வலத்தை காஞ்சிபுரத்தில் நடத்துவதெனவும் அதற்கான முன்னெடுப்புகளுக்காக பு. எல்லப்பன் தலைமையில் ஒருங் கிணைந்து செயல்படுவதென தீர் மானிக்கப்பட்டது. மு. எழிலரசி நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவுற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *