ஆதிதிராவிடர் நலத்துறை நிதியில் 97.6% செலவு செய்யப்பட்டுள்ளது எடப்பாடிக்கு அமைச்சர் கயல்விழி பதிலடி

Viduthalai
1 Min Read

சென்னை, செப்.9- ஆதிதிராவிடர் நலத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி திருப்பி அனுப்பப்படுகிறது என்பது தவறான செய்தி. 97.6 சதவீதம் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றச் சாட்டுக்கு அமைச் சர் கயல்விழி செல்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை:
மயிலாப்பூர் மாண வர் விடுதிக்கு ரூ.19 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.
ரூ.44.50 கோடியில் சென்னை சைதாப் பேட்டை எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி, ரூ.100 கோடி மதிப்பீட்டில் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் நீலகிரி போன்ற பெரு நகரங்களில் நவீன முன்மாதிரி விடுதிகள் அறிவிக்கப்பட்டு கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விடுதி மாணவர்களுக்கு வழங்கும் மாதாந்திர உணவுக் கட்டணம் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 லிருந்து ரூ.1400 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1100லிருந்து ரூ.1500 ஆகவும் உயர்த்தி வழங் கப்பட்டுள்ளது.
சென்னை நகரை பொறுத்தவரை மொத்த முள்ள 19 விடுதிகளுக்கு இரண்டு ஒருங்கிணைந்த சமையலறை மூலம் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மயிலாப்பூர் கல் லூரி மாணவர் விடுதிக்கு நாள்தோறும் சைதாப் பேட்டை எம்.சி. ராஜா மாணவர் விடுதியில் இருந்த மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப சரி யான அளவில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சரியான அளவு மற்றும் தரத்தில் உள்ளதா என்பதை கண்காணிக்க ஒரு செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாள்தோறும் அச்செய லியில் பதிவேற்றம் செய் யப்பட்டு வருகிறது இது சரிதானா என்பதனை அவ்விடுதியில் தங்கியுள்ள மாணாக்கர்களே சரிபார்க்க முடியும்.
ஆதிதிராவிடர் நலத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி திருப்பி அனுப்பப்படுகிறது என்பது தவறான செய்தி. இதுவரை 97.6 சதவீதம் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது.
எனவே அதிமுக பொதுச்செயலாளரின் அறிக்கையானது அடிப் படை ஆதாரங்கள் இல் லாததாகவும் திசை திருப்பும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
– இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *