பொறியியல் 3-ஆம் சுற்று கலந்தாய்வு நிறைவு!

2 Min Read

1.23 லட்சம் மாணவா்கள் சோ்க்கை 70,403 இடங்கள் காலி

சென்னை, செப்.9- தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான 3-ஆம் சுற்று கலந்தாய்வு 4.9.2024 அன்று நிறைவடைந்தது. இதுவரை 1.23 லட்சம் மாணவா்கள் சோ்க்கை பெற் றுள்ளனா். இன்னும் 70,403 இடங்கள் காலியாக உள்ளன.
பொறியியல் மாணவா் சோ்க் கைக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஆக. 23-ஆம் தேதி தொடங்கி 4.9.2024 அன்று நிறைவு பெற்றது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க ஒரு லட்சத்து 14,149 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் 82,693 மாணவா்கள் தங் களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தோ்வு செய்தனா். அதில் தரவரிசை, இடஒதுக்கீடு அடிப்படையில் 3,769 அரசுப் பள்ளிள் மாணவா்கள் உள்பட 51,920 பேருக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை தற்போது வெளியிடப் பட்டுள்ளது.

அதன் விவரங்களை www.tneaonline.org எனும் வலைதளத்தில் அறியலாம். சிறப்புப் பிரிவு மற்றும் பொதுக் கலந்தாய்வின் 3 சுற்றுகள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 23,031 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 70,403 இடங்கள் நிரம்பாமல் காலி யாக உள்ளன.
அதேவேளையில் கடந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் ஒரு லட்சத்து 16,620 இடங்கள் மட்டுமே நிரம்பின. அதனுடன் ஒப்பிடும் இந்தாண்டு சோ்க்கை அதிகரித்திருப்து குறிப்பிடத்தக்கது.
துணைக் கலந்தாய்வு: இதை யடுத்து, காலியிடங்களை நிரப்பு வதற்கான துணைக் கலந்தாய்வு செப்டம்பா் 6 முதல் 8-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

எஞ்சிய இடங்களுக்கு…. உயர் கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியது:
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு சோ்க்கை அதிகரித்துள்ளது. துணைக் கலந் தாய்வும் முடிந்த பின்பு எஞ்சியுள்ள இடங்கள் அந்தந்தக் கல்லூரிகளில் நேரடி சோ்க்கை மூலம் நிரப்பப்படும்.
அதேபோல், பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவா்களின் விவரங்கள் பொது தளத்தில் வெளியான விவகாரத்தில் சைபா் கிரைம் பிரிவில் புகாா் தரப்பட்டுள்ளது. அவா்கள் உரிய விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வார்கள் என்றாா் அவா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *