புதுவை மாநிலத்தின் மேனாள் அமைச்சரான தோழர் இரா. விசுவநாதனின் அய்ம்பதாமாண்டு திருமண நாள் விழா

1 Min Read

புதுச்சேரி, செப்.9- புதுச்சேரி மாநிலத்தின் மேனாள் வேளாண் துறை அமைச்சரும், சமூக நீதிப் பேரவையின் நிறுவனருமான தோழர் இரா.விசுவநாதன், திருமதி. வி.அங்குலட்சுமி ஆகியோரின் அய்ம்பதாமாண்டு திருமண நாள் விழா புதுச்சேரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அந்தக் காலத்தில் தோழர் இரா.விசுவநாதன் அவர்களுக்கு திருமணம் நடைபெற்ற அதே வா.சுப்பையா திருமண மண்ட பத்தில் அய்ம்பதாமாண்டு விழாவும் நடைபெற்றது மிகவும் நெகிழ்வான நிகழ்ச்சியாக அமைந்தது.
6.9.2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் நடை பெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ஆர். சுப்பு ராயன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் மேனாள் அரசு வழக்குரைஞரும், சிவ கங்கை மாவட்டத் திராவிடர் கழகக் காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பநாதன், தன் குடும்பத்தின் சார்பில் தோழர் இரா. விசுவநாதன் தன்னுடைய தந்தையார் வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் 75 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த தோழர் நல்லகண்ணு ஆற்றிய உரையின் நகலும், ‘‘தவத்திரு குன்றக்குடி அடிகளார் அறிவுப் பெட்டகம்’’, ஆசிரியர் எழுதிய புத்தகமும் வழங்கினார், புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி, புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், மலர்க்கண்ணி இன்பலாதன், லிவன் இராஜசுந்தரம், இனியா, தோழர்கள் நடராஜன், செல்வகுமார், விடுதலை வாசகர் வட்டச்செயலாளர் ஆ.சிவராசன், எழுத்தாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், பொறி யாளர் இராதாகிருட்டிணன் ஆகியோர் பயனாடைப் போர்த்தி வாழ்த்துகள் தெரி வித்தனர்.
புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தலைவர் உள்பட மேனாள், இந்நாள் அமைச்சர் பெருமக்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு இயக்கங்களின் அர சியல் பிரமுகர்களும், சமுதாய இயக்கத் தலைவர்களும் கலந்துகொண்டு பட்டாடை அணிவித்தும், மலர்க்கொத்து கொடுத்தும் மகிழ்ந்தனர்.
திருமண நாள் நினைவாக ‘விடுதலை’ சந்தா ரூ 3,000/- வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *