பெரியார் பெருந்தொண்டர் வீ. கண்ணையன் 90 ஆம் ஆண்டு அகவை நிறைவு விழா!

Viduthalai
1 Min Read

புதுச்சேரி, செப்.9- தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யாவிடம் மிகுந்த அன்பும், பாசமும், மதிப்பும், மரியாதையும் வைத்தி ருக்கக்கூடிய கழகத் தோழர், பெரியார் பெருந்தொண்டர் மேனாள் தலைமை ஆசிரியர் வீ.கண்ணை யன் 90 ஆம் ஆண்டு அகவை நிறைவு விழாவும் 91 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா 07.09.2024 காலை 11 மணி யளவில் புதுச்சேரி, அஜிஸ் நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் எளிமையாகக் கொண்டாடப்பட்டது.
பிறந்தநாள் விழா நிகழ்ச்சி யில் திராவிடர் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு அய்யா அவர்களுக்கு சால்வை அணிவித்து கழகத்தின் சார்பில் வாழ்த்துகளையும் வணக்கத்தை யும் பகிர்ந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டக் கழகத் தலைவரும் அய்யா அவர்களின் உடன் பிறந்த தம்பி வீ.மோகன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

அய்யா. வீ.கண்ணையன் பிறந்தநாள் விழாவை அவர்க ளின் மகள் சா. பத்மாவதி, ரா.தேன்மொழி இவர்களின் வாழ்விணையர் சந்தான கிருஷ்ணன், இராமசாமி ஆகியோர் சிறப்பாகச் செய்தி ருந்தனர் அனைவருக்கும் நண்பகல் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் தந்தை பெரியாரின் ‘‘இனி வரும் உலகம்’’ புதிய பகுதிகள் இணைக்கப்பட்டப் புத்தகம் வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *