தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை வானிலை ஆய்வு மய்யம் தகவல்

Viduthalai
2 Min Read

சென்னை, செப்.9- தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (9.9.2024) முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி யுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (8.9.2024) காலை 5.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து 8.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்திற்கு கிழக்கே 280 கிலோ மீட்டர், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு- தென்கிழக்கே 230 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா-மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூ டும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (திங் கட்கிழமை) மாலை அல்லது இரவு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை புரி (ஒடிசா) மற்றும் தீகா (மேற்கு வங்காளம்) இடையே கடக்க கூடும்.

இதனால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற் றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அத்துடன் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என் றும் அறிவித்துள்ளது. மீனவர் களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களுக்கே, துறைமுகத்திற்கு பெரிய சேதம் ஏதுவும் ஏற்படாமல் இருக்க எச்சரிக்கையாக, சென்னையை அடுத்துள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற் றப்பட்டு உள்ளது. பொதுவாக 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக்கூடிய வானிலைஏற் பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் அர்த்தம் என்று துறைமுக அதிகாரிகள் கூறினர்.

மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிலோ மீட்டர் வீசக்கூடும். நாளை (10.9.2024) முதல் 14ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற் றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மன்னார் வளைகுடா,தென் தமிழ்நாடு கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கும ரிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று முதல் 12ஆம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *