பெரியார் பிறந்த நாள் விழா-கன்னியாகுமரி கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

1 Min Read

நாகர்கோவில், செப்.8- பெரியார் பிறந்த நாளை முன் னிட்டு கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்றது. பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம்; பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினர். கல்லூரி பேராசிரியர் மலர் ரத்னா நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். முதல்பரிசு ஜியாபின் இரண்டாம் பரிசு நர்மதா மூன்றாம் பரிசு ரேஷ்மா பெற்றனர். அதிகமான மாணவ,மாணவியர்கள் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. பகுத்தறிவாளர் கழக செயலாளர் எம். பெரியார் தாஸ் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *