தந்தை பெரியார் 146 -ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி கிருட்டினகிரி மாவட்ட ப.க.சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

Viduthalai
1 Min Read

கிருட்டினகிரி, செப். 8- கிருட்டினகிரியில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தைபெரியார் 146 -ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கிருட்டினகிரி கார்நேசன்திடல் பெரியார் மய்யத்தில் நடத்தப்பட்டது.
பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் பங்ககேற்றனர். இப்போட்டியில் 1).பெரியார் ஒரு கேள்விக்குறி? ஆச்சரியக் குறி!, 2). என்றும் தேவை பெரியார், (3). பெரியார் காண விரும்பும் சமுதாயம்,4). மண்டை சுரப்பை உலகு தொழும், 5). புரட்சியாளர் பெரியார்,6). பெரியாரால் வாழ்கிறோம். 7). பெரியார் பிறவாமல் இருந்தால், 8). சுயசிந்தனையாளர் பெரியார் ஆகிய தலைப்புகளில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்ற மாணவர் விவரம் பின்வருமாறு. முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

முதல் பரிசு ரூ2000/- கிருஷ்ணா பி.எட். கல்லூரி மாணவர் மு.சந்தோஷ்குமார், இரண்டாம் பரிசுரூ1500/- சட்டக் கல்லூரி மாணவி மா. வான்மதி, மூன்றாம் பரிசு ரூ1000/- பி.எஸ்.வி. கல்லூரி மாணவி அ.மோனிகா ஆகியோர் பரிசுகளை பெற்றனர்.
நிகழ்ச்சியில் தலைமை கழக அமைப்பாளர் ஊமை செயராமன் கலந்துகொண்டு பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்துப் பேசினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன் தலைமை வகித்தார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் க.வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, நகர செயலாளர் அ.கோ.இராசா, மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், குட்டப்பள்ளி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர் கழக நிர்வாகி ஆர்.எம். ஜெயின் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *