நாகை மாவட்டம் – செருநல்லூர் கிராமத்தில் கொள்கை குடும்பங்களை இல்லம் தோறும் சந்திக்கும் நிகழ்ச்சி!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

செருநல்லூர், செப்.8- நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், செருநல்லூர் கிராமத்தில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 01.09.2024 அன்று மாலை 5.00 மணிக்கு தொடங்கி இல்லம் தோறும் இயக்க தோழர்களை, கொள்கை குடும்பங்களை சந்திக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.எ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ. புபேஸ்குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் பாவா.ஜெயக்குமார், மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு. இளமாறன், கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், மாவட்ட து. செயலாளர் துரைசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன், மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.குட்டிமணி, கீழ்வேளூர் ஒன்றிய து.தலைவர் அரங்கராசு, கீழ்வேளூர் ஒன்றிய அமைப்பாளர் பாஸ்கர், கீழ்வேளூர் இளைஞரணி பொறுப்பாளர் அன்பு மற்றும் கீழ்வேளூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

கழகத் தோழர்களின் இல்லம் தோறும் சென்று செப் – 17 அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாள் – சமூக நீதி நாள் விழாவினை எழுச்சியோடு கொண்டாடுவது பற்றி கலந்துரையாடப்பட்டது,
செப் – 28 திருமருகலில் நடைபெற இருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் பட ஊர்வலத்தில் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டது. தோழர்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்பதாக கூறி மகிழ்ந்தனர். இரவு 9.00 மணி வரை நடைபெற்ற இயக்கத் தோழர்களின் இல்லங்களுக்கே சென்று சந்திக்கும் நிகழ்ச்சியானது செருநல்லூர் கிராம மக்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *