அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபீஸ் வழியே பணி

1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, செப்.8 அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ- ஆபீஸ் (e-office) வழியே பணி தொடர்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அயலக தமிழர்களையும், முக்கிய முதலீட்டாளர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்த பிறகு வரும் 12ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.

இந்த நிலையில் அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ- ஆபீஸ் (e-office) வழியே பணி தொடர்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ- ஆபீஸ் (e-office) வழியே பணி தொடர்கிறது’ இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *