ஈரோடு: அரசுப்பள்ளியில் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்த கழகத் தோழர்

1 Min Read

ஈரோடு, செப். 8- ஆசிரியர் நாளன்று .(5/9/2024) நண்பகல் 12.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் பெ. மேட் டுப்பாளையம் அரசு ஆரம் பப்பள்ளி. தெற்கு பள்ளிக்கு திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் அ.பாட்டுச்சாமி – மல்லிகாகுடும்பத்தின் சார்பாக ஆழ்துளை கிணறு, மின் மோட்டார் மற்றும் குடிநீர் தொட்டி அமைத்து (சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ளைவை) பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டது.

தொடக்க விழாவிற்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம், பெ. மேட்டுப்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி குமாரசாமி, திராவிட முன்னேற்றக் கழக பேரூர் கழகச் செயலாளர் குமாரசாமி, திராவிடர் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பவானி ஒன்றிய செயலாளர் சோ. வீரக்குமரன், திராவிடர் கழக கோபி மாவட்ட காப்பாளர் சிவலிங்கம், திராவிடர் கழக கோபி மாவட்ட செயலாளர் குணசேகரன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் யோகானந்தம், கவுந்தி பாலன், மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், SMC பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள், மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *