அரியலூர், செப். 8- அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல்
கூட்டம் அரியலூர் சிவக்கொழுந்து இல்லத்தில் 3.9.2024 அன்று பகல் 12 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகம் தலைமையேற்க, மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன் ,மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் சு. அறிவன், மாவட்ட துணைச் செயலாளர்பொன். செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன் கடவுள் மறுப்பு கூற, மாவட்ட இணைச் செயலாளர் ரத்தின. ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். தந்தைப் பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டியதை வலியுறுத்தி தலைமைக்கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் சிறப்புரையாற்றினார்.அரியலூர் ஒன்றிய செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.
கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட இளைஞரணி தலைவர் க.கார்த்திக் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க. செந்தில்,ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் மா. கருணாநிதி, ஒன்றிய செயலாளர் ஆ. ஜெயராமன், தாப்பழூர் ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பி. வெங்கடாசலம் செந்துறை ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பராயன், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் வெ. இளவரசன், விவசாய அணி செயலாளர் ஆ இளவழகன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி. சிவக்கொழுந்து, திருமானூர் ஒன்றிய தலைவர் க.சிற்றரசு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ப. மதியழகன், அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் வி. ஜி. மணிகண்டன், உள்ளியக்குடி சிற்றரசு, சூரிய நாராயணன்,அரியலூர் ஆட்டோ தர்மா மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பெ.கோ.கோபால், அயன் ஆத்தூர் கருப்புசாமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்று கருத்துகளை எடுத்துக் கூறினர்.
செந்துறை நகர செயலாளர் ப.இளங்கோவனின் தந்தையார் ந.பழனிமுத்து அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
அறிவுலக பேராசான் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாளை மிகுந்த எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் இனிப்புகள் வழங்கி, கழகக் கொடியேற்றி கிளைக் கழகம் தோறும் பதாகைகள் வைத்து சிறப்பாக கொண்டாடுவதென ஒரு மனதாக தீர்மானிக்கப்படுகிறது.
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் கருத்தரங்கங்கள் நடத்திடுவதென இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.