இங்கு அல்ல பிரான்சில் பள்ளிகளில் அலைபேசி பயன்படுத்த மாணவர்களுக்கு தடை

Viduthalai
2 Min Read

பாரீஸ், செப்.7- இன்றைய இளம் தலைமுறையின ரிடையே அலைபேசி என்பது ஆறாவது விரல் போன்று ஒட்டியே காணப்படுகிறது. தொடர்ந்து இதனை பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு தூக்க மின்மை, கவனக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க உலக நாடுகள் பலவும் முயன்று வருகின்றன.
அந்த வகையில் சுவீடன் அரசாங்கம் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அலைபேசிகளை பயன்படுத்த பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தியது. இந்தநிலையில் மாணவர்கள் அலைபேசி பயன்படுத்தும் நேரத்தை குறைக்க பிரான்சில் புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி 11முதல் 15 வயது வரையிலான மாணவர்கள் பயிலும் நடுநிலைப்பள்ளிக்கு அலைபேசி கொண்டு செல்லக்கூடாது. மீறினால் மாணவர்களின் அலைபேசிகளை ஆசிரியர்கள் பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனையடுத்து உயர்நிலை வகுப்புகளுக்கு இந்த திட்டத்தை விரிவு படுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது.

அலைபேசி பயன்பாட்டுக்கும்
மூளை புற்று நோய்க்கும் தொடர்பு இல்லை
உலக சுகாதார அமைப்பின்
ஆய்வில் கண்டுபிடிப்பு
லண்டன், செப்.7- அலைபேசி பயன்படுத் துவதற்கும், மூளை புற்று நோய் வருவதற்கான அபாயத்துக்கும் தொடர்பு இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் அலைபேசி பயன்பாடு அதிகரித்துள்ளது. அலைபேசியில் இருந்து வெளி யாகும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று பேசப்படுகிறது. மூளை புற்றுநோய் தாக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பு மற்றும் இதர பன்னாட்டு சுகாதார அமைப்புகள், அலைபேசி பயன்பாட்டுக்கும், பல்வேறு உடல் உபா தைகளுக்கும் சம்பந்தம் இருப்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று கூறி வந்துள்ளன. இருப்பினும், இதுகுறித்து விரிவான ஆய்வு நடத்துவது அவசியம் என்று தெரிவித்துள்ளன.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, அலை பேசி பயன்பாட்டுக்கும், மூளை புற்றுநோய்க்கும் சம்பந்தம் உள்ளதா என்று அறிய ஆய்வு நடத்தியது. 10 நாடுகளை சேர்ந்த 11 ஆய்வாளர்கள் இதில் பங்கேற்றனர். ஆஸ்தி ரேலிய அரசின் கதிரியக்க பாதுகாப்பு குழுவும் பங்கேற்றது.

கடந்த 1994ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட 63 ஆய்வுகளின் முடிவுகளும் இந்த ஆய்வில் பயன்படுத்திக்கொள்ளப்பட் டன. அலைபேசியில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு, அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மூளை புற்றுநோய் அபாயம் இல்லை
இந்த ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது:-
“அலைபேசி பயன்படுத் துவதற்கும், மூளை புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதி கரிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. நீண்ட நேரம் அலைபேசி பேசுபவர்களுக்கும், 10 ஆண்டுகளுக்கு மேலாக அலைபேசி பயன்படுத்தி வருபவர்களுக்கும் கூட இது பொருந்தும். அலைபேசி பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ளது. அதற்கேற்றாற்போல், மூளை புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கவில்லை. இதில் இருந்தே இரண்டுக்கும் சம்பந் தம் இல்லை என்பதை அறியலாம்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *