தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவன் தேர்வு

1 Min Read

பண்ருட்டி, செப்.7- இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கூடைப் பந்து போட்டிக்கு தமிழ்நாடு அணிக்கான கடலூர் மண்டல அளவில் வீரர் வீராங்கனைகள் தேர்வு பண்ருட்டி யில் உள்ள ஜான் டி வே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் கடலூர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், அரியலூர், கரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 180 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு

அதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் கலந்து கொண்டு 17 வயதிற்குட்பட்ட பிரிவில் 12ஆம் வகுப்பைச் சேர்ந்த ஆர்.பிரதீப் குமார் மாநில அளவிலான தேர்வுப் போட் டிக்கு தகுதி பெற்றனர்.
மாநில அளவிலான தேர்வு போட்டிகள் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கின்றது.
மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரரையும் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர், மற்றும் ரஞ்சனி ஆகியோரையும் பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் வாழ்த்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *