மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 05.09.2024 அன்று சென்னை, எழும்பூர், அரசு கண் மருத்துவமனையில் நடைபெற்ற 39ஆவது கண்கொடை இருவார விழாவில், கண்கொடை பெற்றவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் சென்னை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.தேரணிராஜன், அரசு கண் மருத்துவமனை இயக்குநர் மரு.தங்கராணி, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலாளர் மரு.கோபாலகிருஷ்ணன் மற்றும் உயரலுவலர்கள் கலந்து கொண்டனர்.