மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா!
வல்லம், செப்.7- பெரியார் மணியம்மை நிகர்நிலை பல் கலைக்கழகத்தில் மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர் கள் உரையாற்றும்போது, இப்பல் கலைக்கழத்தால் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் தனது வாழ்த் துகளை தெரிவித்தார்.
ஒரு மாணவன் தன்னை திறன்பட உருவாக்கிய ஆசிரியரை தேர்வு செய்து அவர்களுக்கு ஆசிரியர் நாள் விழா அன்று விருது வழங்குவது சிறப்பானது என்றார்.
ஒரு மாணவனுக்கு தாய், தந்தை, ஆசிரியர் முக்கியமானவர்களாக கருதப்படுவார்கள். ஆசிரியர் நாள் விழா வாழ்த்துகளை எனது குடும்பத்திலிருந்து ஆரம்பித் துள்ளேன். ஒரு நிகழ்ச்சிக்கு நான் சென்ற போது எனது ஆங்கில ஆசிரியர் என்னை வரவேற்றதில் பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.
எனக்கு பசுமையான நினைவுகள் வந்து சென்றது. எனக்கு ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு முடிய உள்ள அனைத்து ஆசிரியர்களையும் நினைவில் கொண்டு உரையாற் றினார். மேலும், ஒரு பொறாமை இல்லா வாழ்க்கை என்றால் அது ஆசிரியர் பணிதான். ஒரு மாணவன் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால் கவலைப் படக் கூடியவர்கள் தாய், தந்தை, ஆசிரியர்கள் மட்டும் தான்.
மேலும் அப்துல் கலாமின் ஆசிரியர் ஒருதடவை வானத்தில் பறவை எப்படி பறக்கிறது என்று மாணவர்கள் கேட்டதற்கு அந்த ஆசிரியர் மாணவர்களை கடலுக்கே அழைத்து சென்று பறவைகள் எப்படி பறக்கிறது என்று காண்பித்ததாக கூறினார்.
83 வயதுடைய ஏழ்மையில் வாழும் ஆசிரியருக்கு அவர்களது மாணவர்கள் அவருக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அப்படி என்றால் அந்த முன்னூறு மாணவர்களையும் பாராட்ட வேண்டும். அந்த ஆசிரியரையும் பாராட்ட வேண்டும். நமது இந்திய நாட்டின் குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த போது ஓமன் நாட்டிற்கு சென்றபோது அந்த நாட்டின் அதிபர் எந்த நாட்டு தலைவர்கள் வந்திருந்தாலும் அவர்களை வரவேற்க விமான நிலையத்திற்கு செல்லமாட்டார்.
ஆனால். நமது குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா அந்நாட்டிற்கு சென்ற போது அந்நாட்டின் அதிபர் விமான நிலையத்திற்கு வந்து நேரில் வந்து வரவேற்றார். இது அங்கே இருந்தவர்களை வியக்க வைத்தது. அதற்கு அதிபர் சொன்ன காரணம் சங்கர் தயாள் சர்மா அவர்கள் எனக்கு ஆசிரியராக இருந்தார். அதனால் நான் நேரில் வந்து அழைத்தேன் என்று கூறினார்.
மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தாராஜன் உரையாற்றும் போது நான் இவ்விருதை இரண்டாவது முறையாக பெறுகிறேன். இந்த தேர்வு என்பது வித்தியாசமான ஒன்று. மாணவரின் படிப்பிற்கு உறு துணையாக இருந்த ஆசிரியரை மாணவரே தேர்வு செய்து விருது வழங்குவதற்கு தேர்வு செய்தது மிகச் சிறப்பாகும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர்
பி.கே.சிறீவித்யா நன்றியுரையாற்றும் போது மாணவர்களின் நலனில் அக்கறைக்கொண்டு அந்த மாணவனை கல்வியில் திறம்பட செய்து அம்மாணவனின் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கிறீர்கள். ஆசிரியர் பணி என்பது உயர்வான பணி என்றார். மேலும் பேராசிரியர் ராக்கேஸ் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் தானியங்கி ஆய்வகம் மற்றும் ரோபடிக்ஸ் ஆய்வகத்தை பற்றி எடுத்துக்கூற ஆறாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.