அருப்புக்கோட்டையில்…
அருப்புக்கோட்டை, செப்.7- அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலையம்பட்டி தேரடி வீதி பெரியார் திடலில், 03.09.2024 அன்று மாலை 6 மணியளவில், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டமும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 51A(h) பிரிவு விளக்கப் பரப்புரைக் கூட்டமும் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் விடுதலை தி.ஆதவன் தலைமையில் தோழர்கள் ஆர்ப்பாட்ட முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து ஒன்றிய செயலாளர் இரா.முத்தையா தலைமையில், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ந.ஆனந்தம், மாவட்ட துணை அமைப்பாளர் பெ.சந்தனம் ஆகியோர் முன்னிலையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.அழகர் வரவேற்புரையாற்றினார். இராசபாளையம் மாவட்ட தலைவர் பூ.சிவகுமார் மந்திரமா? தந்திரமா? அறிவியல் செயல் விளக்க நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தினார். மாவட்ட தலைவர் கா.நல்லதம்பி ஒன்றிய அரசு கல்விக்கான நிதி தர மறுக்கும் அடாவடித்தனத்தை விளக்கி கண்டன உரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழக கிராமப் பகுத்தறிவுப் பிரச்சாரக் குழு மாநிலச் செயலாளர் முனைவர் அதிரடி அன்பழகன் சுயமரியாதை இயக்கச் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.
மாவட்டக் காப்பாளர் அ.தங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி, பாலையம்பட்டி தி.மு.க. கிளைச் செயலாளர் யோ.இளம்பாரதி, அருப்புக்கோட்டை நகர அமைப்பாளர் க.சுப்பிரமணி, இளைஞரணித் தலைவர் ஆ.கிள்ளிவளவன், செயலாளர் க.திருவள்ளுவர், மு.முனியசாமி, நா.அறிவழகன், முத்துக்குமார், வின்சென்ட் செல்வராஜ் மற்றும் தோழர்கள் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இறுதியாக அருப்புக்கோட்டை நகர செயலாளர் பா.இராசேந்திரன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.
திருத்தணி – ஆர்.ஜி.கண்டிகையில்…
திருத்தணி, செப். 7- 5-9-2024 அன்று மாலை 5 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.ஜி.கண்டிகையில் திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மா.மணி, தலைமையில் மாவட்ட செயலாளர் கோ. கிருஷ்ணமூர்த்தி, மேநாள் மாவட்ட தலைவர் க.ஏ.மோகண வேலு, மாவட்ட இணை செயலாளர் ரமேஷ் (எ) அறிவுச்செல்வம், மாவட்ட துணைத் தலைவர் இரா.ஸ்டாலின், மாவட்ட ப.க.அமைப்பாளர் சி.நீ.வீரமணி, அகூர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் தொடக்க உரையை பொதுக்குழு உறுப்பினர் பொதட்டூர் புவியரசன் நிகழ்த்தினார். தலைமைக் கழக அமைப்பாளர் பு.எல்லப்பன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். திராவிடர் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக மேஜிக் நிபுணர் ராசா நகரம் க.ஏ.தமிழ் முரசு அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை பார்த்து மக்கள் பிரமித்தனர்.நன்றியுரையை மாவட்ட ப.க.தலைவர் நல்லாசிரியர் விருது பெற்ற கி.எழில் வாத்தியார் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில்…
வாலாஜாபாத், செப். 7- 3.9.2024 அன்று மாலை 5.00 மணியளவில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51 ஏ(எச்) பிரிவு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வாலாஜாபாத் ஒன்றிய கழக அமைப்பாளர் எஸ். செல்வம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
மாவட்ட கழக இணைச் செயலாளர் சீதாவரம் ஆ. மோகன் தலைமையேற்று உரையாற்றினார்.
மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா. இளம்பரிதி ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.
எழுச்சி பாடகர் வாலாஜாபாத் சம்பத்குமார் பெரியார், அம்பேத்கர் குறித்து பாடல்கள் பாடினார்.
விசிக ஒன்றிய செயலாளர் அசோக்குமார், அரக்கோணம் பெரியார்நேசன், அறிவு வளர்ச்சி மன்றத்தின் அமைப்பாளர் நாத்திகம் நாகராசன், ரவிபாரதி, பாலாறு பாதுகாப்புக் கூட்டியக்கம் காஞ்சி அமுதன், செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக தலைவர் செங்கை சுந்தரம் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் பு. எல்லப்பன் மதிமுக மாவட்டச் செயலாளர் ஜி. கருணாகரன் ஆகியோர் உரையாற்றினர்.
திராவிடர் கழக துணை பொதுச் செயலாளரும் வழக்குரைஞருமான செ.மே. மதிவதனி, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளரும் கழகச் சொற்பொழிவாளருமான முனைவர் காஞ்சி கதிரவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சுயமரியாதை இயக்க வரலாறு, தந்தை பெரியார் தொண்டுகள், பகுத்தறிவு தொடர்பான கருத்துகள், மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளான அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், மனிதநேயத்தை வளர்த்தல் முதலிய செய்திகள் குறித்தும் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி, தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வளர்ச்சியில் திராவிட இயக்க சாதனைகள், திராவிட மாடல் ஆட்சியின் முற்போக்குச் செயற்பாடுகள் முதலியவை குறித்தும் மோடி ஆட்சியின் தமிழ்நாட்டுக்கு எதிரான துரோகச் செயல்பாடுகள், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படாமை குறித்து கண்டனமும் தமிழ்நாட்டுக் கல்வி முறை தர மற்றது என்ற ஆளுநர் ரவி அவர்களுக்குக் கண்டனமும் தெரிவித்து கூட்டத்தில் உரையாற்றினர்.
மாவட்ட மகளிர் பாசறை தோழியர் ரேவதி நன்றி கூறினார்.
கூட்டத்தில், கழக மேனாள் செயலாளர் இரா. சக்திவேல், போளூர் பன்னீர்செல்வம், மறைமலைநகர் பிச்சைமுத்து, நரசிம்மன் அரக்கோணம் ராஜா, அருண்குமார், வாலாஜாபாத் ஒன்றியக்குழு துணைத் தலைவர் திமுக பி. சேகர், மதிமுக பேரூராட்சி செயலாளர் சிவக்குமார், திமுக அரிகிருஷ்ணன், குணசேகரன், பாவலர் அமுதகீதன்,
பூசிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் லெனின், தன்னாட்சித் தமிழகம் பழனி, பழவேரி விசிக தோழர் ஹரிதாஸ் உள்ளிட்ட தோழர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்கள் நின்று கருத்துகளைக் கேட்டனர்.
வாலாஜாபாத் பகுதியில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் பெரும் எழுச்சியை உண்டாக்கியது.
புதுக்கோட்டையில்…
புதுக்கோட்டை, செப். 7- புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் ஒன்றிய அரசு மக்கள் மீது திணிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் ரெ.மு.தருமராசு அனைவரையும் வரவேற்றார்.
கழகக் காப்பாளர் ஆ.சுப்பையா, புதுக் கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், அறந்தாங்கி மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் ச.குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கறம்பக்குடி முத்து, செ.இராசேந்திரன், மூ.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மேலும் மாவட்டத் துணைத் தலைவர் சு.கண்ணன், மாநகரச் செயலாளர் பூ.சி.இளங்கோ, கழகத் தோழர் கள் அ.பத்மநாபன், குழிபிறை ஆ.சிவா, கு.கணேசன், மகளிரணித் தோழியர்கள் த.செயலெட்சுமி, த.ரெங்;கமணி, தா.மரகதம், ரெ.கவிநிலவன், த.மாரிமுத்து, ம.மு.கண்ணன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தேசியக் கல்விக் கொள் கையைத் திணிப்பதா? தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதா? என்ற கேள்விகளுடன் ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.