அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
சென்னை, செப்.7- அரசு பள்ளியில் பகுத் தறிவுக்கு விரோதமாகப் பேசிய மூட நம்பிக்கை பேச்சாளரைக் கைது செய்யவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை: சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பேச்சாளர் மூட நம்பிக்கையை வளர்க்கும் வகையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
கல்வியறிவை வளர்க்க வேண்டிய பள்ளிகளில் இத்தகைய நச்சு கருத்து களால், மிகப்பெரிய பேராபத்தை தமிழ்நாடு எதிர்நோக்கும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: அரசுபள்ளிகள் மூட நம்பிக்கை கருத்து களுக்கான பரப்புரை மேடையாகவும், போலி என்சிசி பயிற்சி என்ற பெயரில் சமூக மோதல்களை உருவாக்கும் பயிற்சிக் களமாகவும் பயன்படுத்துவதை பள்ளிக் கல்வித்துறை தடுக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது மிகவும் ஆபத்தானது. இந்நிகழ்ச்சியை முன்னெடுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரையும், தலை மையாசிரியரையும் உடனடியாக பணிநீக்கம் செய்வதுடன், பேச்சாளர் மகாவிஷ்ணுவையும் கைது செய்ய வேண்டும்.
சட்டப்பேரவை விசிக குழு தலைவர் சிந்தனை செல்வன்: சென்னை அரசு பள்ளியில் அரங்கேற்றப்பட்ட ஸநாதன உரையாடல் பேரதிர்ச்சியை தருகிறது. ஸநாதன சக்திகள் புதிய முகமூடிகளுடன் புறப்பட்டிருப்பது குறித்து தீவிரமாய் விவாதிக்க வேண்டும்.
எஸ்டிபிஅய் மாநில பொதுச்செயலாளர் அகமது நவ்வி: சமூகநீதி மாநிலமான தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் மாற்றுத் திறனாளி ஆசிரி யரை இழிவுப்படுத்தி பேசிய மகாவிஷ்ணு மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.