7.9.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாடு பள்ளிகளில் அரசின் முன் அனுமதி இல்லாமல் கல்விசாரா எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
*சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சைதாப்பேட்டை அரசு மாதிரிப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம், செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகார் மாநில 65 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் குறித்து விளக்கம் அளிக்க அம்மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது; ஆர்.ஜே.டி. தொடர்ந்த வழக்கை அடுத்து இந்த உத்தரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அரியானா பாஜக ஓபிசி மோர்ச்சா தலைவர் பதவியிலிருந்து விலகினார். கரண் தேவ் காம்போஜ்; கட்சி சந்தர்ப்பவாதிகளை களமிறக்கினால் அர்ப் பணிப்பு உள்ளவர்கள் எப்படி வேலை செய்வார்கள்? என புலம்பல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உயர்கல்வியில் சேரும் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களின் சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2022-2023இல் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் குறைந்தது 62% பேர் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ் மொழி இலக்கிய திறன் தேர்வு 2024 பதிவு தொடங்கியது. தமிழ்நாடு அரசு இந்தத் தேர்வை பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 1,500 மாணவர்களைக் கண்டறியும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ₹1,500 உதவித்தொகை வழங்கப்படும்.
– குடந்தை கருணா