‘திராவிட மாடல்’ அரசின் வரவேற்கத்தக்க செயற்பாடு! புதிரைவண்ணார் நல வாரியம் திருத்தி அமைப்பு!

1 Min Read

அரசியல்

புதிரைவண்ணார் நல வாரியத்தைத் திருத்தி அமைத்து கடந்த 4.8.2023 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை வரவேற்கத்தக்க தாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியில் ‘திராவிட மாடல்’ அரசு காட்டி வரும் அக்கறைக்கும் தனிக் கவனத்துக்கும் இந்த ஆணை ஒரு சான்றாகும்.

சமூகநீதியில் புதிரை வண்ணார் என்ற பிரிவு நியாயமாக எஸ்.சி., எஸ்.டி., ஆதிதிராவிட பழங்குடி இனப் பிரிவின்கீழ் இணைக்கப்பட்டு, தனி இட ஒதுக்கீடு பெற முழுத் தகுதி படைத்தவர்கள்!

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் அடுக்குமுறை பேத சமூக ஏற்பாட்டின்படி, பல ஊர்களில் மிகமிக கீழ் நிலையில் ஒதுக்கப்படும் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள சமூகம்.

 முன்பு  அருந்ததியினர் பிரிவுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கியது போல ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்வதும் அவசியமாகும்.

மாண்புமிகு முதலமைச்சரும், தமிழ்நாடு அரசும் இதுபற்றி ஆழ்ந்து பரிசீலிக்கவேண்டும்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை
7.8.2023   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *