முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

Viduthalai
1 Min Read

சென்னை, செப்.6 தமிழ்நாட்டில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையைச் சுற்றி உள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 50 கனஅடியாக சரிந்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்இருப்பு 2375 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 58 மில்லியன் கனஅடியாக உள்ளது.

500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 303 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 10 கனஅடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 34.66% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 34.37%, புழல் – 71.97%, பூண்டி – 2.66%, சோழவரம் – 5.36%, கண்ணன்கோட்டை – 60.6 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *