தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பேச்சுப் போட்டி

Viduthalai
2 Min Read

ஆவடி, செப். 6- தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம் சார்பாக மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி அறிவிப்பை யொட்டி ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவ- மாணவியருக்கான பேச்சு போட்டி 01-09-2024 அன்று காலை 11-00 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜானகிராமன், செயலாளர் க.கார்த்திக்கேயன் ஒருங்கிணப்பில் நடைபெற்றது.

தி.மு.க.செய்தி தொடர்பு துணை செயலாளர் பொள்ளாச்சி சித்திக், ஊடகவியலாளர் இசையின்பன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் துரை அருண் ஆகியோர் நடுவர்களாக இருந்து பெரியார் பிறவாமல் இருந்திருந்தால் என்ற தலைப்பில் பேசிய ஆஃபரின் பானு (செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி) முதலிடமும் அதற்கான பரிசுத்தொகை ரூபாய் 3000, பெரியார் காண விரும்பும் சமுதாயம் என்ற தலைப்பில் பேசிய ரா.வர்ஷா (செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி) இரண்டாம் இடமும் அதற்கான பரிசுத்தொகை ரூபாய் 2000, புரட்சியாளர் பெரியார் என்ற தலைப்பில் பேசிய வி.பிரியதர்ஷினி (சிந்திக்கல்லூரி) மூன்றாவது இடம் பரிசுத்தொகை ரூபாய் 1000என தேர்ந்தெடுத்தனர்.

இதற்கிடையில் நான்காவது இடம் பிடித்த மாணிக்கஜோதி (சிந்திக் கல்லூரி) மாணவியை ஊக்குவிக்கும் விதமாக நடுவர் இசையின்பன் தனது சொந்த பணம் ரூபாய் 500 அளித்தார். மற்றும் ஆவடி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வெ.கார்வேந்தன் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ-மாணவியர்களுக்கும் ரூபாய் 500 அளிப்பதாக கூறி அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.

அது மட்டுமில்லாமல், அய்ந்தாமிடம் பிடித்த குனேஸ்வரி (எஸ்ஏ கல்லூரி) மாணவியை அழைத்து கூடுதலாக ரூபாய் 500 வழங்கி நெகிழவைத்தார்.மு.விஷால் (வேல் டெக் பொறியியல் கல்லூரி) ஏ.அக்ஷயா (ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி) சு.பிரதீபா (வேல் டெக் சட்டக் கல்லூரி) ‌ரா.கலைவாணி (செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி) கா.சமிக்ஷா (சவீதா சட்டக் கல்லூரி) சா.பேரரசன் (A M ஜெயின் கல்லூரி) ர.ஜனனி (SA கலைக் கல்லூரி) ல.புவனேஸ்வரி (வள்ளியம்மை மகளிர் கல்லூரி) க‌.தமிழ்வளவன் (வேல் டெக் சட்டக் கல்லூரி) ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் மாணவ- மாணவியர்களின் பெற்றோர்களும் ஆவடி மாவட்ட திராவிடர் கழக தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாட்டை வை.கலையரசன்- ரவீந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *