கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தந்தை பெரியார் படம் அன்பளிப்பு

1 Min Read

கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் உலக மனிதநேய மாண்பாளர் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கிருட்டினகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலத்தில் பெரியார் படம் வைக்க மாவட்டத் தலைவர் கோ. திராவிடமணியின் ஏற்பாட்டில் 03.09.2024 – செவ்வாய்க்கிழமை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.செயராமன், மாவட்டத் தலைவர் கோ. திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் வருவாய் கோட்டாட்சியரைச் சந்தித்து தந்தை பெரியார் படத்தினை வழங்கினர்.

உடன் மாநில ப.க. துணைப்பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மேனாள் மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் கா. மாணிக்கம், மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், நகரச் செயலாளர் அ.கோ. இராசா, நகரத் தலைவர் கோ.தங்கராசன், ஒன்றியத் தலைவர் த.மாது, காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து இராஜேசன், மாணவர் கழக நிர்வாகி மத்தூர் ச.அகரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *