கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தந்தை பெரியார் படம் அன்பளிப்பு

Viduthalai
1 Min Read

கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் உலக மனிதநேய மாண்பாளர் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கிருட்டினகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலத்தில் பெரியார் படம் வைக்க மாவட்டத் தலைவர் கோ. திராவிடமணியின் ஏற்பாட்டில் 03.09.2024 – செவ்வாய்க்கிழமை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.செயராமன், மாவட்டத் தலைவர் கோ. திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் வருவாய் கோட்டாட்சியரைச் சந்தித்து தந்தை பெரியார் படத்தினை வழங்கினர்.

உடன் மாநில ப.க. துணைப்பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மேனாள் மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் கா. மாணிக்கம், மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், நகரச் செயலாளர் அ.கோ. இராசா, நகரத் தலைவர் கோ.தங்கராசன், ஒன்றியத் தலைவர் த.மாது, காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து இராஜேசன், மாணவர் கழக நிர்வாகி மத்தூர் ச.அகரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *