ஒன்றிய அரசைக் கண்டித்து தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம் – கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு

Viduthalai
1 Min Read

தாம்பரம், செப். 5 புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வழங்கப்படும் என்ற ஒன்றிய அரசின் முடிவை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழகம் சார்பாக 3.9.2024 அன்று மாலை 5 மணியளவில் தாம்பரம் பாரதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடை்பெற்றது.

முதலில் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கம் எழுப்பப்பட்டது‌. பிறகு கண்டன உரையை மாநில இளைஞர் அணி செயலாளர் மு.சண்முகப்பிரியன். வி.சி.க மாவட்ட செயலாளர் சாமுவேல் எபிநேசர், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதி மாறன், ஜெய்னுல் ஆபிதீன் உரையைத் தொடர்ந்து இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் கண்டன உரை ஆற்றினார். இதில் தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் பன்னீர்செல்வம், கழக அமைப்பாளர் ம.சுபாஷ், சோழிங்கநல்லூர் கழக காப்பாளர் வீரபத்திரன், தமிழ் இனியன் ஜெயராமன். மாடம்பாக்கம் கருப்பையா, தாம்பரம் குணசேகரன், படப்பை சந்திரசேகர், சன் சரவணன், வீர சிவாஜி, சீர்காழி இராமண்ணா, க.ராமேஷ்,
கோ. ஜெயசந்திரன், சதிஷ், ஆதிசங்கரர், க.யாழினி, முத்து முஜ்பாத், முகமது ஜமின், அ.நிர்மலா, சையத்முபின், ராமச்சந்திரன், மா.இராசு, பாலகிருஷ்ணன், ராகுல், சஞ்சய், குமரன், தாமரைச் செல்வன், அன்பு, முத்து, மாரி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தி.மு.க., விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *