ஜெயங்கொண்டம், செப்.5- கடந்த 3.9.24 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா முதல்வர் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழ் இலக்கிய மன்றத்தின் நோக்கம் மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தையும் அறிவையும் வளர்ப்பதே ஆகும்.
மாணவர்கள் ஆர்வத்துடன் தமிழ் மன்றத்தில் கலந்து கொண்டு தன் திறமைகளை வெளிக் கொணருகின்றனர். அதனை மெய்ப் பிக்கும் வகையில் இவ்விழா வரவேற்பு நடனத்துடன் இனிதே தொடங்கியது.
மாணவர்கள் வேலுநாச்சியார், தமிழன்னை,அன்னை தெரசா, பாரதியார், கொடிகாத்த குமரன் போன்று பல்வேறு வேடங்களில் ஒப்பனை செய்து அனைவரையும் மகிழ்வித்தனர்.
அதுமட்டுமின்றி தமிழ்மொழியின் செவ்வியல் பண்புகளை மாணவி அற்புதமாக எடுத்துரைத்தார். மாணவிகள் தமிழ் மொழியின் சிறப்புகளை இனிய பாடலாக பாடி செவிகளுக்கு விருந்தளித்தனர். சிலப்பதிகாரத்தில் உள்ள வழக் குரை காதையை நாடகமாக நடித்துக் காட்டி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர்.
மேலும் எழுத்துகளுக்குள் வார்த்தையை தேடும் வார்த்தை விளையாட்டில் மாணவ, மாண விகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விடையளித்தனர்.
மாணவர்கள் ஒய்யாரமாக துள்ளி குதித்து வந்து ஒயிலாட்டம் ஆடி அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.