பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 90ஆம் அகவையில் கல்லூரி தொடங்கத் திட்டம் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, செப். 5- தமிழால் உலகளந்த பெருங்கவிக்கோவின் 90ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் பிப்ரவரி 9, 2025 முழுநாள் தமிழ்ப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட உள்ளது.

அவர் பணி பாடும் செயல்களை எப்படிச் செயல்படுத்துவது என்று ஆலோசிக்கும் செயல் வீரர்கள் கூட்டம் மே, 4 அன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் அன்னைக்குத் தமிழ்நாட்டில் முதன்மை வேண்டி 1993இல் தமிழ் நடைப் பயணம் நடந்து, தொடர்ந்து இன்று வரை ஆண்டு தோறும் நடந்து, ஓடி, உந்தி, பறந்து, தமிழ் மொழி, இனம், நாடு தழைக்கப் பல ஆயிரம் பயணங்கள் செய்த பெருங்கவிக்கோவிற்கு அகவை 90.

பெருங்கவிக்கோ கல்லூரி தமிழ் ஆர்வலர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனமாக மாற்ற தமிழர்கள் “ஒரு ரூபாய்” ஆவது நன்கொடை வழங்க வழிவகுக்கும் இந்தியத் தமிழர்களுக்கான “பெருங் கவிக்கோவிற்குப் பெருமை சேர்க்க “உங்கள் பங்கு ஒரு உரூபாய்” திட்டத் தையும், ”உலகக் கவியின் உன்னதப் பணிக்கு உங்கள் பங்கு” என்ற அயலகத் தமிழருக்கான திட்ட விவரங் களையும், கல்லூரி அமைக்க இதுவரை நடந்துள்ள பணிகளையும், தமிழ்ப் பணிக் கழகத் தலைவர் வா.மு.சே.கவி அரசன் எடுத்துரைத்தார்.

பாவாணர் கோட்ட நிறுவனர் நெடுஞ்சேரலாதன், பைந்தமிழ் இயக்க நிறுவனர் தமிழாளன் திட்டத்தை செயல்படுத்தும் வழியை விவரித்தனர். மறத்தமிழன் தொலை இணையில் இணைந்தவர்களை ஒருங்கிணைக்க, உலக அன்னதான நாள் நிறுவனர் சாய் இரவிச்சந்திரன், கவிஞர் இரவி பாரதி, பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயக்குநர் வா.மு.சே.திருவள்ளுவர், தமிழ் இயலன், தலைநகரத் தமிழ்ச் சங்கத்தின் கணபதி, கவிச்சிங்கம், கண்மதியன் ‘முற்றம்’ ஆசிரியர் தளபதி, சிந்தை வாசன், அம்பேத்கர் மன்றத்தின் நந்தன், கவிக்குயில் கவிஞர் மன்றத்தின் தலைவர் தமிழரசன், பீட்டர், சேக் இரசீது, சிந்தை கோ.சேகர் மற்றும் பலர் பெருங்கவிக்கோ 90 ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு 2025 கல்வி ஆண்டில், கல்லூரி தொடங்கும் பணிக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *