நுகர்வுக்கு அவற்றின் தயாரிப்புகள் பயன்படுத்தப் படுகின்றன.
இந்நிறுவனத்தின் தலைமையகங்கள் அயர்லாந்து (Ireland) நாட்டின் டப்ளின் (Dublin) மற்றும் அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் (Ohio) பீச்வுட் (Beachwood) ஆகிய இடங்களில் அமைந் துள்ளன. உலகளவில் 35 நாடுகளில் சுமார் 208 இடங்களில் உற்பத்தி வசதிகள் கொண்ட பார்ச்சூன் 500 நிறுவனங் களில் ஒன்றா கும். ஈட்டன் நிறுவனத்து டன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது.
முதலமைச்சர் முன்னிலையில், ஈட்டன் நிறுவனத் திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன் பாட்டு பொறியியல் மய்யத்தை (Global Utility
Engineering Centre) நிறுவு வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அஷ்யூரன்ட் நிறுவனம்
பார்ச்சூன் 500 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்று அஷ்யூரன்ட் நிறுவனமாகும். இந்நிறுவனம் அட்லாண் டாவை தலைமையிடமாக கொண்டு இடர்மேலாண்மை தயாரிப்புகள் மற்றும் சேவை களை வழங்கி வருகிறது. சொத்து, விபத்து, நீட்டிக்கப் பட்ட சாதனங்களின் பாது காப்பு போன்ற பலவிதமான சிறப்பு மற்றும் முக்கிய சந்தை காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகின்றன.இந்நிறுவ னத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்காவினை அட்லாண்டாவில் அமைந் துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அஷ்யூரன்ட் நிறுவனத் திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே, அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவியதிறன் மய்யத்தை சென்னையில் நிறுவுவ தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வின் போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய். தொழில் வழிகாட்டி நிறுவ னத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு உடனிருந்தனர்.
சமூகவலைதள பதிவு
சிகாகோவில் சட்டன் மற்றும் அஷ் யூரன்ட் நிறுவனங் களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது குறித்து சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:
சிகாகோவில் மற்றுமொரு பய னுள்ள நாள், சென்னையில் ரூ.200 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில், ஈட்டன் நிறுவனத் தின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பொறியியல் மய்ய விரிவாக்கத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டேன். மேலும், இந்தியாவில் அஷ்யூரன்ட் நிறுவனத்தின் முதல் உலகளாவிய திறன் மய்யம், விரைவில் சென்னையில் அமையவுள்ளதையும் உறுதி செய்தேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.