“விடுமுறை” தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் விடுப்பு எடுப்பது எந்த முறையில்?

1 Min Read

சென்னை, செப்.5- தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதற்கு புதிய விதிமுறையை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனி விடுமுறை எடுக்க வேண்டும் எனில் அவர்கள் “களஞ்சியம்” என்ற செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அதன்படி இனி தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் விடுப்பு எடுக்கும் பட்சத்தில் களஞ்சியம் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.

அப்படி விண்ணப்பித்தால் மட்டும்தான் அவர்களுக்கு விடுமுறையானது கிடைக்கும். மேலும் இந்த ஆண்டில் இதுவரை விடுமுறை எடுத்தவர்களின் விவரங்களையும் களஞ்சியம் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *