“விடுமுறை” தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் விடுப்பு எடுப்பது எந்த முறையில்?

Viduthalai
1 Min Read

சென்னை, செப்.5- தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதற்கு புதிய விதிமுறையை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனி விடுமுறை எடுக்க வேண்டும் எனில் அவர்கள் “களஞ்சியம்” என்ற செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அதன்படி இனி தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் விடுப்பு எடுக்கும் பட்சத்தில் களஞ்சியம் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.

அப்படி விண்ணப்பித்தால் மட்டும்தான் அவர்களுக்கு விடுமுறையானது கிடைக்கும். மேலும் இந்த ஆண்டில் இதுவரை விடுமுறை எடுத்தவர்களின் விவரங்களையும் களஞ்சியம் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *