சென்னை, செப்.5 தமிழர் களுக்கு எதிராக கருத்து தெரி வித்த விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கோரினார்.
தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்புக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான் காரணம் என ஷோபா கரந்தலஜே கூறியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபேவில் நடை பெற்ற குண்டு வெடிப்பு நிகழ்விற்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் காரணம் என ஒன்றிய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யது. இது தொடர்பாக மதுரை யில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அமைச்சர் ஷோபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் திருந்தார். கடந்த முறை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு 3.9.2024 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் ஷோபா சார்பில் ஒரு பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெங்களூரு குண்டு வெடிப்பு நிகழ்வில் தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கோருவதாக அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் “எந்த உள்நோக்கத் துடனும், தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவிக்கவில்லை. தனது கருத்து தமிழர்களை புண்படுத்தியதை புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் மன்னிப்பு கோரினேன். தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு மீது மிகுந்த மரி யாதை வைத்துள்ளேன். தனது கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்புக் கோருகிறேன்” என தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை இன்று (5.9.2024) ஒத்தி வைக்கப்பட் டுள்ளது.