தமிழ்நாட்டு மீனவர்களை விரட்டித் தாக்கும் அவலம் இலங்கை கடற்படையினரின் தொடரும் அட்டூழியம்

Viduthalai
1 Min Read

இராமேசுவரம், ஆக. 7- இராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க  சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித் தனர்.  

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமையன்று மீன்  வளத்துறை அனுமதி பெற்று 450-க்கும்  மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென் றனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.அப்போது 5 ரோந்துக் கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழ்நாட்டு மீனவர்கள் மீது  பாட்டில் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். 

மேலும் 20 க்கும் மேற்பட்ட விசைப்படகு களில் வலைகளை கடலில் வெட்டி விட்டு  அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதனால் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலே கரை திரும்பினர்.  இதனால் படகுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நட்டத்துடன் கரை திரும்பி யதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். ஒன்றிய, மாநில அரசுகள் தமிழ்நாடு  மீனவர்களின் பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *