திருவாரூரில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி

Viduthalai
1 Min Read

திருவாரூர், செப். 4- திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 63 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கருத்து மழை பொழிந்தனர்.
முன்னதாக பேச்சுப்போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஈவேரா தலைமை வகித்தார்.

தலைமைக் கழக அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட கழக செயலாளர் சுரேஷ் பேச்சுப் போட்டியினை தொடங்கி வைத்தார். பேச்சுப்போட்டி நடுவர்களாக மாநில பொதுக்குழு உறுப்பினர் நல்லாசிரியர் முனியாண்டி, நல்லாசிரியர் செந்தமிழ்செல்வி, ஆசிரியர் நாகராஜன் ஆகியோர் செயல்பட்டு, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை தேர்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் சொற்பொழிவா ளர் தேவ.நர்மதா, பகுத்தறிவு ஆசிரியர் அணியின் மேனாள் மாநில அமைப்பாளர் சிவக்குமார், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் நேரு, நன்னிலம் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கரிகாலன், செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி தலைவர் பிளாட்டோ, திருவாரூர் நகரத் செயலாளர் ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் வேதமூர்த்தி, விஜய கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேச்சு போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாண விகள் தந்தை பெரியார் பற்றிய கருத்துகளை அடைமழையாக பொழிந்து தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலை 4 மணி வரை இடைவிடாது நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா ஆகியவை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *