நீலகிரி மாவட்டம், உதகை, தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில், 02.09.2024 அன்று நடைபெற்ற நிகழ்வில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் முன்னிலையில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 100 விவசாயிகளுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பில் தேயிலை அறுவடை இயந்திரங்களும், 14 விவசாயிகளுக்கு ரூ.15.87 இலட்சம் மதிப்பில் விசை இழுவை இயந்திரம் மற்றும் களை எடுக்கும் கருவிகளை வழங்கினார். உடன் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் செல்வி அபூர்வா, வேளாண் விற்பனை – வேளாண் வணிகத்துறை ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் கோ.பிரகாஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன், வேளாண்மைத்துறை இயக்குநர் பா.முருகேஷ், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உட்பட பலர் உள்ளனர்.
வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அறுவடை இயந்திரங்கள் வழங்கல்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books