போபால், செப்.4– மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட் டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் மாடுகளை வலுக் கட்டாயமாக மூழ்கடித்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நிகழ்வு 27.8.2024 அன்று நடந்துள்ளது. மாடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் காட்சிப் பதிவு வைரலானதை அடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.
பம்ஹூர் என்ற பகுதியில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில், வெள்ளம் கரைபுரளும் ஆற்றுக்குள் மாடுகள் விரட்டப் படுவதும், அவை நீரில் அடித்துச் செல்லப்படுவதும் பதிவாகியுள்ளது. வேகமான நீரோட்டத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அடித்துச் செல்லும் பல மாடுகள் தடுப்பணையை நோக்கி விழுகின்றன.
பல மாடுகளின் கால்கள் முறிந்து உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 20 மாடுகள் ஆற்றில் தள்ளி விடப்பட்டதாகவும், அவற்றில் அய்ந்துக்கும் மேற்பட்ட மாடுகள் இறந்ததாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
முழுமையான விசார ணைக்குப் பின்னரே சரியான எண்ணிக்கை தெரியவரும் என காவல் துறையில் தெரிவித் துள்ளனர். இதுகுறித்து துணைப் பிரிவு காவல் அதிகாரி (எஸ்டிபிஓ) நாகவுட் விடிதா தாகர் கூறுகையில், “தெருவில் சுற்றித் திரிந்த மாடுகளை ரயில்வே பாலத்திற்கு அடியில் ஆற்றுக்குள் சிலர் தள்ளி விட்டதாக தகவல் கிடைத்தது” என்றார்.
மேலும், “நிகழ்வு நடந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு, நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் அதே இடத்தில் வசிப்பவர்கள். ஒரு சிறுவன் மீதும் குற்றம் சாட் டப்பட்டுள்ளது” என்றார்.
கைது செய்யப்பட்ட பீட்டா பக்ரி, ரவி பக்ரி மற்றும் ராம்பால் சவுத்ரி ஆகிய மூவரும் அருகிலுள்ள கிராமத்தில் வசிப் பவர்கள். குற்றம் சாட்டப் பட்ட நான்கு பேர் மீதும் 4/9 பசுவதைத் தடைச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சந்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 325 (3/5) ஆகிய வற்றின் கீழ் வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது.
வெளிச்சத்துக்கு வரும் நிகழ்வுகள்
தெருவில் சுற்றித் திரிந்த மாடுகள் பயிர்களை நாசம் செய் வதை தடுக்கவே இதைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த பகுதியில் இப்படி நடப்பது முதல் முறை அல்ல.
இதற்கு முன்பும், ரேவா மாவட்டத்தில், பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் மலைப் பகுதிக்கு கொண்டு செல்லப் பட்டு, அங்கிருந்து கீழே தள்ளப் பட்டுள்ளன. இதனால் பல மாடுகள் இறந்தன, பல மாடுகளின் கால்கள் உடைந்தன. இதுபோன்ற பல கொடூர நிகழ்வுகள் இந்தப் பகுதியில் நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த சமூக சேவகர் சிவானந்த் திவேதி கூறுகையில், இது போன்ற நிகழ்வுகள் தற்போது சகஜமாகி விட்டன என்றார்.
“இயந்திரங்களின் பயன்பாட் டால் மாடு, காளைகளின் தேவை முற்றிலுமாக ஒழிந்து விட்டது. மக்கள் பசுக்களை பாலுக்காக மட்டுமே வைத்துக் கொள்கின்றனர்.
பால் சுரப்பது குறைந்ததும் மாடுகளை துரத்தி விடு கிறார்கள். தற்போது காளைகள் விவசாயத்தில் பயன்படுத்தப் படுவதில்லை. எனவே, மக்கள் அந்த காளைகளை விபத்துகள் நடக்கும் சாலைகளில் விட்டு விட்டு செல்கின்றனர்” என்றார்.