‘‘புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதை தமிழ்நாட்டுப் பாடங்களில் இல்லாத ஏமாற்றத்தில் பேசும் ஆளுநர்”

2 Min Read

சு.வெங்கடேசன் பதிலடி

சென்னை, செப்.4 கல்வி யில் சிறந்த மாநிலமாக தமிழ் நாடு விளங்கி வருகிறது. அண்மையில் ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட உயர்கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டியலில், முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டிலிருந்து 22 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.
முதல் 50 அரசு பல்கலைக் கழகங்கள் பட்டியலில் தமிழ் நாடு அரசின், அண்ணா பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், அழகப்பா பல்கலைக் கழகம், பெரியார் பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகம், மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம், ஆகிய 10 பல்கலைக் கழகங்கள் இடம் பிடித்துள்ளன.

அதிலும், இந்தியாவிலேயே முதல் மாநில பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.இப்படி தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வியில் தமிழ் நாடு சிறந்து விளங்கி வருகிறது.
இதனால்தான் ஒன்றிய அரசின் குலக்கல்வியை போதிக் கும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது.
மேலும் இருமொழி கொள்கை யிலும் தமிழ்நாடு அரசு உறுதி யாக உள்ளது.இதை தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றிய அரசு, கல்விக்கு தரவேண்டிய நிதியை கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
தற்போது ஆளுநரை வைத்து மாநில அரசின் பாடத்திட்டத்தை விமர்சிக்க தொடங்கி இருக்கிறது.தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, ”தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது, மாநில பாடத்திட்டங்கள் தரம் மோசமாக உள்ளது” என பேசியுள்ளார்.

ஆளுநரின் இந்த பேச்சுக்கு அமைச்சர்கள் க.பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கண்டித்துள்ளனர். மேலும் கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,”மாநில பாடத் திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளார். புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ் நாட்டு பாடங்களில் இல்லை. தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு” என ஆளுநரின் பேச்சுக்கு கண்ட னம் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *