ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்கள்: 11,558

1 Min Read

ரயில்வே துறையில் தொழில் நுட்பம் அல்லாத பிரிவில் 11,558 காலிப் பணியிடங்களுக்கு செப்.14 முதல் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்வே துறையில் தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவின் கீழ் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் தொழில் நுட்பம் சாராத பணியிடங்களுக்கு தற்போது காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் முதுநிலை அலுவலா் பிரிவில் 8,113 பணியிடங்கள், இளநிலை அலுவலா் பிரிவில் 3,445 பணியிடங்கள் என மொத்தம் 11,558 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதுநிலை பிரிவில் தலைமை பயணச் சீட்டு பரிசோதகர், நிலைய அதிகாரி, சரக்கு ரயில் மேலாளர், இளநிலை கணக்கு உதவியாளர் – தட்டச்சர் மற்றும் முதுநிலை எழுத்தர் – தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு செப்.14 முதல் அக்.13 வரை விண்ணப் பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு மாத ஊதியம் ரூ.29,200 முதல் ரூ.35,400 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பிரிவில் பயணச் சீட்டு பரிசோதகர், கணக்கு எழுத்தர் – தட்டச்சர், இளநிலை எழுத்தர், பயிற்சி எழுத்தர் பணியிடங்களுக்கு செப்.21 முதல் அக்.20 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு ஊதியம் ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பிரிவுக்கு 18 முதல் 36 வயதுக்குள் உள்ளவர்களும், இளநிலை பிரிவுக்கு 18 முதல் 33 வயதுக்குள் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி பிளஸ் 2 முதல் பட்டப்படிப்பு வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.500, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மற்றும் மேனாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், சிறுபான்மையினருக்கு ரூ.250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் முதல்நிலை தோ்வில் பங்கேற்ற பின் திரும்ப செலுத்தப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *