“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்

viduthalai
8 Min Read

ஊற்றங்கரை நொச்சிப்பட்டியில்…

நொச்சிப்பட்டி, செப்.4- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றிய கழக சார்பில் நொச்சிப் பட்டியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு- பெண் ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கப் பரப்புரை திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் 29.8.2024 -நொச்சிப்பட்டி கலையரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது.

இப்பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் செ. பொன்முடி தலைமை வகித்து பேசினார். ஒன்றிய தலைவர் அண்ணா அப்பாசாமி வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ. திராவிடமணி, ஊற்றங்கரை ஒன்றிய ப.க.தலைவர் இராம.சகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.

நிகழ்ச்சியில் தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், கழகச் சொற்பொழிவாளர் தருமபுரி த.மு. யாழ்திலீபன் ஆகியோர் பேசும் போது மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு இந் திய அரசியல் சட்டம் 51 A(h) பிரிவு விளக்கம் குறித்தும், தந்தை பெரியாரும் – புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பதை விளக்கியும் சுயமரியாதை இயக்கம் மக்களுக்கு ஆற்றிய அரும் பெரும் பணிகளை எடுத்துக் கூறியும் மேலும் அறிவியல் மனப்பான்மை மக்களிடத்தில் வளர்க்க வேண்டிய அவசிய பயன்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்கள்.

ஊற்றங்கரை, மத்தூர், அரூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்களையும் இளைஞர் களையும் பகுத்தறிவாளர்களாக உருவாகியவர். திராவிடர் கழக முன்னாள் மண்டல தலைவர் பழ. வெங்கடாசலம், திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி,விடுதலை சிறுத்தைகள் கட்சி தொழிலா ளர் முன்னணி மாநில துணைச் செயலாளர் சா.அசோகன், மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.வெங்கடாசலம், பெ.குமாரசாமி ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செய லாளர் மா.செல்லதுரை, மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து இராசேசன், மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், துணைத்தலைவர் சா.தனஞ்செயன், மாணவரணி ச.அகரன், சி.பி.அய். (எம்) இரா.லெனின், செ.சின்னண் ணன், கோ.முருகன், கி. இரமேஷ் அ.சிவமணி, விஜியன், இராஜ்குமார், செ.வெங்கடாசலம், இரமணி உள்பட கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மத்தூர் ஒன்றிய கழக துணைத்தலைவர் சா.தனஞ்செயனின் பெயர்த்தி ஷீலா தந்தை பெரியார் படத்தை சிறப்பாக வரைந்ததை பாராட்டி தலைமை கழக அமைப்பாளர் ஊமை. செயராமன் சால்வை அணிவித்து பாராட்டினார்.

முடிவில் ஒன்றிய கழக செயலா ளர் செ.சிவராஜ் நன்றி கூறினார். ஒரு வட்டார மாநாடு போல இரண்டு நாட்களுக்கு முன், தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோர் படங்கள் ஜிடிட்டல் கட்டவுட் பேனர்கள், கழக கொடிகள், கழகப் பாடல்கள் ஒளி ஒலிபெருக்கி வைத்து சிறப்பாக ஒளிப்பரப்பப்பட்டது. கூட்டத்திற்கு முன் மாலை சுமார் 1 மணிநேரம் கடுமையான மழை பெய்தது. தொடர்ந்து நொச்சிப்பட்டி மாநகரில் திராவிடர் கழக கொள்கை அடை மழையாய் பொழிந்து இரவு 9.30 மணிக்கு கூட்டம் நிறைவுபெற்றது.

நாகப்பட்டினத்தில்…

திராவிடர் கழகம்

நாகை, செப். 4- திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலை வர், ஆசிரியர் அவர்களின் அறி வுறுத்தலின்படி “சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண் ணுரிமைப் பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் சரத்து 51A(h) விளக்கச் சிறப்புக் கூட்டம் நாகை நகர திராவிடர் கழகம் சார்பில் 31.08.2024 மாலை 7.00 மணிக்கு நாகை அபிராமி அம்மன் திடலில் தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது.

நாகை நகரத் தலைவர் தெ.செந்தில்குமார் தலைமையில் நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.எ.நெப்போலியன், மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. திராவிட மாணவர் கழக செ.அறிவுச்செல்வன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

மாநில சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் தொடக்க உரை யாற்றினார். கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தின் இறுதியில் திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர் வீ.அருண் அனைவருக்கும் நன்றி கூறினார்.
கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா.முத்துக்கிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் மு.க. ஜீவா, மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன், மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.குட்டிமணி, கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் பாவா.ஜெயக்குமார், கீழையூர் ஒன்றிய தலைவர் ரெ.ரெங்கநாதன், பொதுக்குழு உறுப்பினர் ந.கமலம், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.கவிதா, கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் செ.பாக்யராஜ், நாகை நகர அமைப்பாளர் சண்.ரவிக்குமார், பகுத்தறிவாளர் கழக பு.அலமேலு, பகுத்தறிவாளர் கழக சி.தங்கையன், குருகத்தி தமிழ்செல்வன், மதுரை சுரேஷ்குமார், தனுஷ்யா, தேவி, சுதன் உள்ளிட்டோரும் மற்றும் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

திருவரங்கத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

திராவிடர் கழகம்

திருவரங்கம், செப். 4- திருவரங்கம் நகர கழக சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கம், கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருவரங்கம் பேருந்து நிலையம் அருகில் அக்.30 ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருவரங்கம் நகர தலைவர் சா.கண்ணன் வரவேற்புரையாற்றினார். திருவரங்கம் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் எஸ். அரிகரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், வாசகர் வட்டத் தலைவர் தா.ஜெயராஜ், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை ஈட்டி கணேசன் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் துணைத் தலைவர் அண்ணாதுரை, ஜெயில்பேட்டை துணைத் தலைவர் பா.குணசேகரன் , பாச்சூர் அசோகன் உள்ளிட்ட கழக தோழர்களும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவலர் குடியிருப்பில்…

திராவிடர் கழகம்

திருச்சி, செப். 4- திருச்சி மாவட் டம், திருவெறும்பூர் ஒன்றியம், காவலர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பெரியார் அரங்கத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மூடநம்பிக்கை ஒழிப்பு பெணணுரிமைப் பாதுகாப்பு இந்திய அரசியல் சட்ட விதி 51A(h) பிரிவு விளக்கப் பொதுக்கூட்டம் 29.8.2024 அன்று நடைபெற்றது.

திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் வரவேற்புரையாற்றினார். பெல். ம.ஆறுமுகம் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி, பெல் ஆண்டிராஜ், பெல் அசோக்குமார், பெரியார் பெருந்தொண்டர்கள் சபாபதி, அமுதா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.“
கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி பெரியார் பெருந்தொண் டர்கள் நாராயணசாமி கருணாகரன், கல்பாக்கம் இராமச்சந்திரன் பேராசிரியர் நெடுஞ்செழியன், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த தங்கவேலு ஆகியோர் உரையாற்றினர். மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகளையும், பெரியாரின் தொண்டுகளையும் விளக்கிப் பேசினார்.

கழக தொழில்நுட்பக்குழு மாநில அமைப்பாளர் வி.சி.வில்வம் கழகப்பாடலைப் பாடி மூடநம்பிக்கைகள் எப்படியெல்லாம் இந்த சமுதாயத்தைச் சீரழிக்கிறது என்பதை எடுத்துச் சொன்னார். கழகப் பேச்சாளர் புவனகிரி யாழ் திலீபன் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் தந்தை பெரியாரின் உழைப்பால் பலனடையாதவர் யாருமே கிடையாது. இட ஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தபோது தந்தை பெரியார் போராடியதன் விளைவாகத்தான் இந்திய அரசியல் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டது என்பதையும் அப்படி திருத்தப்படவில்லையானால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட எவருக்கும் கல்வி வேலைவாய்ப்பு எதுவும் கிடைத்திருக்காது என்று பேசினார்.

தந்தை பெரியார் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்களை விரிவாக வினக்கி அந்த மாநாட்டுத் தீர்மானத்தின் படிதான் இந்தியாவிலேயே முதல் முதலாக பெண்களுக்கு சொத்துரிமை கிடைத்தது. இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதி பாதுகாக்கப்படுகிறது என்பதால் அரசியல் சட்டத்தைக் கொளுத்தி பல்லாயிரம் தொண்டர்களோடு சிறை சென்றார். 1924 இல் வைக்கத்தில் தீண்டத்தகாத மக்கள் தெருக்களில் நடக்கக் கூடாது என்று இருந்த தடையை நீக்க பெரியார் நடத்திய போராட்டமே அம்பேத்கர் மகத் குளத்தில் தண்ணீர் அருந்த நடந்த போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்தது என்று அம்பேத்கர் எழுதியதையும் கூறி உரையாற்றினார்.

முன்னதாக புள்ளம்பாடி புரட்சிப்பாடகர் பொற்செழியன், தென்மொழிப்பண்ணன் ஈகவரசன் பெல் ஆண்டிராசு ஆகியோர் இயக்கப்பாடல்களையும் சமூக விழிப்புணர்வுப் பாடல்களையும் பாடினார்கள்.

இக்கூட்டத்தில் திருவரங்கம் நகர செயலாளர் முருகன், அன்பழகன், பாச்சூர் அசோகன், காட்டூர் கிளை செயலாளர் சங்கிலிமுத்து, காட்டூர் கனகராசு, சாந்தி, துப்பாக்கித் தொழிற்சாலை கருணாநிதி, தி.அன்பழகன், தமிழ்வாணன், அமுதா, சபாபதி, செல்லதுரை, பெல் நிறுவனத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணன், பெரியசாமி, ப.குப்புசாமி, மு.பெரியசாமி, செம்மல் செங்கோ, புனிதவளனார் கல்லூரிப் பேராசிரியர் நெடுஞ்செழியன், அண்ணாநகர் தேன்மொழி, செல்வி, ஈகவரசன் ரமணி, கீதா மோகன், தீயணைப்புத் துறையைச் சேர்ந்த சத்தியவர்த்தன் ஆட்டோ பொன்னுசாமி, அம்மணிஅம்மாள் தமிழ்ச்சுடர், சகுந்தலா உள்ளிட்ட கழகத் தோழர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். நிறைவாக ம.கனகராசு நன்றி கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில்….

திராவிடர் கழகம்

பாணாவரம், செப். 4– 1.9.2024 அன்று மாலை ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் மேம்பாலம் கீழ், காந்தி சிலை அருகே திராவிடர் கழகம் சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(H) பிரிவு விளக்க பொதுக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சு.லோகநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் செ.கோபி முன்னிலையில் தொடக்க உரையாக தலைமைக்கழக அமைப் பாளர் பு.எல்லப்பன், இணைப்புரை மாவட்ட இளைஞர் அணி தலைவர் சிங்கப்பூர் மு.சங்கர், அறிமுக உரை காவேரிப்பாக்கம் மு.நகர செயலாளர் போ.பாண்டுரங்கன், சிறப்புரையாக, கழக சொற்பொழி வாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, மாநில ப.க. பொறுப்பாளர் முனைவர் காஞ்சி கதிரவன், உரைகளை அடுத்து மா.ப.க.செயலர். நா.இராமு, வாலாஜா இரா.தமிழ்வாணன், வினா. சிட்டிபாபு, மா.து.தலைவர் பொன்.வெங்கடேசன், மாவட்ட அமைப்பாளர் சொ.ஜீவன்தாஸ், பன்னியூர்.பெ.ராஜேந்திரன், ஆகி யோர் உரையாற்றினர்.

நன்றியுரை.வீரமணி பெரியண் ணன். இரவு உணவு தி.மு.க.மா.து. செயலர் துரை.மஸ்தான் அனை வருக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய் திருந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பாணாவரம் கூட்டம் மக்களின் அமோக வரவேற்புடன் சிறப்பாக நடந்தது.முன்னதாக ப.க.மாநில அமைப்பாளர் சி.நீ.வீரமணி தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் R.K.பேட்டை அடுத்த ராசா நகரை சேர்ந்த மேஜிக் நிபுணர் க.ஏ.தமிழ்முரசு மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை மாணவர்களின் பெருத்த ஆரவாரத்துடன் செய்து காட்டினார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *