எச்சரிக்கை! அலைபேசிக்கு சார்ஜ் போட்ட பெண் மின்சாரம் பாய்ந்து சாவு!

Viduthalai
1 Min Read

சேலம், செப்.3- சேலத்தில் அலைபேசிக்கு சார்ஜ் போட்ட பெண் மின்சாரம் தாக்கி பரிதாப மாக இறந்தார்.
சேலம் சின்ன திருப்பதி அம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர் கவுதம். இவருடைய மனைவி ராதா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. நேற்று முன்தினம் (1.9.2024) காலையில் ராதா, தனது அலைபேசிக்கு சார்ஜ் போட முயன்றுள்ளார். திடீரென மின்சாரம் தாக்கி ராதா தூக்கி வீசப்பட்டார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் மற்றும் அவருடைய அப்பா, ராதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ராதாவை பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மின்சாரம் தாக்கி ராதா இறந்தது குறித்து காவல்துறையினர் வழக் குப் பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.
காவல்துறையினர் விசாரணை

விசாரணையில், அலைபேசி சார்ஜர் ஒயர் சேதமாகி அதன் மூலம் மின்சாரம் ராதாவை தாக்கியதா? அல்லது அங்கு இருந்த வேறு ஒயர் மூலம் மின் சாரம் தாக்கி ராதா இறந்தாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அலைபேசிக்கு சார்ஜ் போட்ட பெண் மின்சாரம் தாக்கி இறந்த நிகழ்வு அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *