திருநெல்வேலிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வரவேற்பு, மேயர் மற்றும் மூத்த இயக்க தோழர்களுக்குப் பாராட்டு (1.9.2024)

1 Min Read

திருநெல்வேலிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் பயனாடை அணிவித்து வரவேற்பு

திராவிடர் கழகம்

சட்டமன்ற மேனாள் தலைவர் ஆவுடையப்பன், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் வஹாப், நெல்லை மேயர் இராமகிருஷ்ணன் (கிட்டு), சுப.சீதாராமன், மேனாள் அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

திராவிடர் கழகம்

நெல்லை மாநகராட்சி மேயராக பதவியேற்றுள்ள இராமகிருஷ்ணன் (கிட்டு) அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். மூத்த திராவிட இயக்க சிந்தனையாளர் சுப.சீதாராமன், பெரியார் பெருந்தொண்டர் வேலாயுதம் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

திராவிடர் கழகம்

மூத்த திராவிட இயக்க சிந்தனையாளர் பத்தமடை பரமசிவம், திராவிடர் கழக மாநகரத் தலைவர் மும்பை ரெத்தினசாமி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். மூத்த பெரியார் பெருந்தொண்டர் காசி உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் தமிழர் தலைவர் நேரில் சென்று நலம் விசாரித்தார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *