ஜனநாயகத்தை நம்பி தேர்தல் களத்தில் பிரிவினைவாதிகள்

1 Min Read

ஒமர் அப்துல்லா

சிறீநகா், செப்.3 ‘ஜனநாயகத்தை நம்பி ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் போட்டியிட பிரிவினை வாத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் முன்வந்துள்ளது, பிரச்சினைகளுக்கு வன்முறை தீா்வாகாது என்பதை உறுதி செய்கிறது’ என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தார்.
கந்தா்பால் மாவட்டத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
இதற்கு முன்பு தோ்தல்கள் நடைபெற்றபோது பிரிவினைவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் தோ்தலைப் புறக்கணிக்க அழைப்பு விடுப்பார்கள். ஆனால், இப்போது அவா்களும் தோ்தலில் போட்டியிடுகின்றனா். இதன் மூலம் அவா்கள் கொள்கை அளவில் மாறியுள்ளனா்.

பிரச்சினைகளுக்கு வன்முறை தீா்வாகாது என்பதையும் இந்த நிகழ்வு உறுதி செய்கிறது. இதுதான் தேசிய மாநாட்டுக் கட்சியின் நிலைப்பாடு. நாம் அடைய வேண்டிய இலக்குகளை எட்டுவதற்கு ஜனநாயகம் ஒன்றே சிறந்த வழி. பிரிவினைவாதிகள் இப்போது ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டது வரவேற்கத்தக்கது. இது நம் அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்றார்.
பிரிவினைவாதத் தலைவா் சையது சலீம் கிலானி, மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்தது குறித்த கேள்விக்கு, ‘இந்த கேள்விக்கு பதிலளித்து மோதலை உருவாக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நான் அதற்கு பதிலளிக்க மாட்டேன்’ என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *