அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

1 Min Read

பாப்பிரெட்டிப்பட்டி, செப்.2- தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 30.8.2024 வெள்ளிக்கிழமை அன்று பாப்பிரெட்டிப்பட்டி நரசுஸ் காபி திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பெ. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியை பாப்பிரெட்டிப் பட்டி பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி தொடங்கி வைத்தார். மாவட்ட கழகத் தலைவர் கு. தங்கராஜ், கழக காப்பாளர் அ.தமிழ்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஜீவிதா, மொரப்பூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் அறிவுமணி, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மு, சிலம்பரசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற பொறுப்பாளர் பாளையம் பசுபதி ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

மாநில கலைத்துறை செயலாளர், இயக்குநர் மாரி. கருணாநிதி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, ஒருங்கிணைத்து நடத்தினார். மாநில தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.
‘‘பெரியார் ஒரு கேள்விக்குறி’’, ‘‘என்றும் தேவை பெரியார்’’, ‘‘பெரியார் காண விரும்பிய சமுதாயம்’’, ‘‘புரட்சி யாளர் பெரியார்’’, ‘‘பெரியாரால் வாழ்கிறோம்’’, ‘‘பெரியார் பிறவாமல் இருந்திருந்தால்’’ போன்ற தலைப்புகளில், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரி, அரசினர் கலைக் கல்லூரி, அரூர் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கடத்தூர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், மாணவிகள் பேச்சு போட்டியில் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றி தழ் வழங்கப்பட்டது

போட்டியில், முத்தமிழரசன் முதல் பரிசு (ரூபாய் 3000) கோ.இனியகவி, இரண்டாம் பரிசு (ரூபாய் 2000) சுபலட்சுமி (ரூபாய் 1000) பெற்றனர். அவர்களுக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சா. ராஜேந்திரன், டாக்டர் பழனிசாமி பேரூர் கழக தலைவர் செங்கல் மாரி ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தனர். பேச்சுப் போட்டிக்கான நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல் மாண வர்களுக்கான பயிற்சி பட்டறையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *