ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

viduthalai
1 Min Read

தருமபுரி, செப். 2- கருநாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது. இதனால், கருநாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, கடந்த 3 நாட்களாக கபினி நீர்பிடிப்பு பகுதி மற்றும் மண்டியா மாவட் டத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளன. இதனால், அணை களுக்கு நீர் வரத்து அதிகரித் துள்ளது.

31.8.2024 அன்று காலை கபினி மற்றும் கே.ஆர்.எஸ்.அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 22 ஆயிரத்து 529 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு நேற்்று (1.9.2024) மேலும் அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப் படி ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், ஆற்றில் குளிக்கவோ, பரிசல் இயக்கவோ வேண் டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *