ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

1 Min Read

தருமபுரி, செப். 2- கருநாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது. இதனால், கருநாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, கடந்த 3 நாட்களாக கபினி நீர்பிடிப்பு பகுதி மற்றும் மண்டியா மாவட் டத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளன. இதனால், அணை களுக்கு நீர் வரத்து அதிகரித் துள்ளது.

31.8.2024 அன்று காலை கபினி மற்றும் கே.ஆர்.எஸ்.அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 22 ஆயிரத்து 529 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு நேற்்று (1.9.2024) மேலும் அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப் படி ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், ஆற்றில் குளிக்கவோ, பரிசல் இயக்கவோ வேண் டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *