உலக சுகாதார நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கை ஒன்று, 2050-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 250 கோடி நபர்கள் ஏதோ ஒரு வகையில் கேட்கும் திறனில் பாதிப்பைச் சந்திப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
2050-ஆம் ஆண்டில் 10-இல் ஒரு நபருக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற் படலாம் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.
தற்போதைய சூழலில் உலக மக்கள் தொகையில் 5% நபர்களுக்கு, அதாவது 43 கோடி மக்கள் கேட்கும் திறனில் பிரச் சினைகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் 3.4 கோடி குழந்தைகளும் அடங்குவார்கள்.
இந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நபர்களில் 80% பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வசித்து வருகின்றனர்.
கேட்கும் திறனில்
குறை உள்ளவர்கள் யார்?
பொதுவாக காது கேளாமை பிரச்சினை ஒரு காது அல்லது இரண்டு காதுகளிலும் ஏற்படலாம். சில நேரங்களில் கேட்கும் திறன் குறைபாடு மிகவும் குறைவாக இருக்கலாம் அல்லது அது தீவிரமாகவும் இருக்கலாம்.
கேட்கும் திறனில் பிரச்சினை உள்ள வர்கள் மற்றவர் களுடன் உரையாடுவதில் பெரிய அளவில் பிரச்சினை இருக்காது. கருவிகள் மற்றும் இதர தொழில்நுட்ப உதவிகளுடன் அவர்கள் மற்றவர்களுடன் உரையாடவும், அவர்கள் உரையாடுவதைக் கேட்கவும் இயலும்.
ஆனால், காது கேட்கும் திறனை முழுமையாக இழந்தவர்களால் மற்றவர்கள் பேசுவதைக் கேட்க இயலாது. அவர்கள் மற்ற வர்களுடன் உரையாடுவதற்கு அதிகமாக சைகை மொழியை பயன்படுத்துகின்றனர்.
யார் ஒருவரால் 20 டெசிபல் என்ற அளவில் எழுப்பப்படும் ஒலியைக் கேட் பதில் பிரச்சினை இருக்கிறதோ அவர்களின் கேட்கும் திறன் குறைந்து வருகிறது என்று பொருள்.
இது, மரபு ரீதியாக இருக்கலாம். இளம் வயதில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஆரோக்கிய பிரச்சினைகள் காரண மாகவும் கேட்கும் திறன் குறையலாம். சத்தமான சூழலில் வாழ்வதும் கூட இந்த குறைபாடுகளுக்கு வழி வகுக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.
இரண்டு காதுகளிலும் கேட்கும் திறனை முற்றிலுமாக இழந்த நபர்கள் சைகை மொழியில் மற்றவர்களுடன் உரையாடு கின்றனர்.
கேட்கும் திறனில் பிரச்சினை
எதனால் ஏற்படுகிறது?
சிலருக்கு மரபு ரீதியாகவே பிரச் சினைகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் குழந்தைகள் பிறக்கும் போது ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ஹைபர்பிலிரூபினேமியா எனப்படும் மஞ்சள் காமாலை நோய்த் தொற்று போன்றவற்றாலும் சிறு வயதிலேயே காது முழுமையாகக் கேட்காமல் போவது மற்றும் கேட்கும் திறனில் பிரச்சினைகள் ஏற்படுவது போன்றவை நிகழும் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.