தி.மு.க. முப்பெரும் விழா! விருதுகள் அறிவிப்பு!

2 Min Read

சென்னை, செப்.2- திமுக முப்பெரும் விழாவை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டுக் கான முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக பவள விழா ஆண்டான இந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விழா நடைபெறுகிறது.
திமுகவின் தாய் கழகமான திராவிடர் கழகத்தை நிறுவியவர் தந்தை பெரியார். பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 கொண்டாடப்படுகிறது. தொடக்க காலத்தில் பெரியாருடன் இணைந்து அண்ணாவும் திராவிடர் கழகத் திலேயே பயணித்து வந்தார்.

1940-களின் பிற்பகுதியில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட் டதையடுத்து அண்ணா 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

தனிக்கட்சி தொடங்கினாலும் கூட பெரியார் மீது அண்ணா மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இதனால் திமுகவில் தலைவர் பதவி பெரியாருக்காக காலியாக விடப் படும் என்று அறிவித்து, கடைசி வரை திமுக பொதுச் செயலாளராகவே அறிஞர் அண்ணா இருந்தார். அதேபோல அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

எனவே, திமுக சார்பில் ஆண்டு தோறும் செப்டம்பர் 15, 17 ஆகிய தேதிகளில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு திமுக பவள விழா ஆண்டு முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெறுகிறது.

இதனையொட்டி விருது பெறுவோர் விவரங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன்படி பாப்பம் மாளுக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா விருது அறந்தாங்கி மிசா இராம நாதனுக்கு வழங்கப்பட உள்ளது.

இதேபோல் கலைஞர் விருது

எஸ்.ஜெகத்ரட்சகனுக்கும், பாவேந்தர் விருது தமிழ் தாசனுக்கும் வழங்கப் பட உள்ளது. பேராசிரியர் விருது வி.பி.ராஜனுக்கு வழங்கப்பட உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *