’18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

1 Min Read

சென்னை, செப்.1- தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் விரைவில் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித் துள்ளார். இது குறித்து சேலத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது;-

“உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு என்பது பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோவில் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவிலான புற்றுநோய் பாதிப்புகள் கண்டறி யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அங்கு 18 வயது நிரம்பிய அனை வருக்கும் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங் களிலும் இந்த ஆண்டு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை மேற் கொள்வதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ஆரம்ப நிலைகளிலேயே புற்றுநோயை கண்டறிந்தால், அவர்களை 100 சதவீதம் காப்பாற்றிவிட முடியும்.”
– இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *